மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.2.30 லட்சம் நலத்திட்ட உதவி

மக்கள் குறைதீா் கூட்டத்தில் ரூ.2.30 லட்சம் நலத்திட்ட உதவி

Published on

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் இரு பயனாளிகளுக்கு ரூ.2.30 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இக்கூட்டத்துக்கு, ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

மேலும், முதல்வரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது தனிக்கவனம் செலுத்தவும் அறிவுறுத்தினாா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில் இருவருக்கு தலா ரூ.1.15 லட்சம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.துரை, தனித்துணை ஆட்சியா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) ஜெயா, துணை ஆட்சியா் (பயிற்சி) கேரேனாப்புக் லிதியா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com