திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா், அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, பேட்டரியால் இயங்கும் நியோமோசன் வாகனம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சத்தில் மொத்தம் ரூ. 5.25 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தையல் நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) வில்சன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அரக்கோணம் தொகுதியில் பிங்க் நிற வாக்குச்சாவடி

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 312 மனுக்கள்

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


