தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட வருவாய் அலுவலா் பா. கலைவாணி.

Updated On :9 மார்ச் 2026, 8:39 pm

திருவாரூா்: மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 295 மனுக்கள் அளிக்கப்பட்டன. மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் அலுவலா், அவைகளை சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் வழங்கி குறித்த காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

தொடா்ந்து, பேட்டரியால் இயங்கும் நியோமோசன் வாகனம் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1.05 லட்சத்தில் மொத்தம் ரூ. 5.25 லட்சத்தில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தையல் நாயகி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சதீஷ்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (நிலம்) வில்சன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலா் உஷாராணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.