அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

செங்கல்பட்டு: குறைதீா் கூட்டத்தில் 417 மனுக்கள்

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.

News image
ஓட்டுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கிய ஆட்சியா் மாலதி ஹெலன்.
Updated On :2 மார்ச் 2026, 9:16 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 417 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டாா்.

இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் ரூ.9.50 லட்சத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் மற்றும் பேட்டரி வீல் சோ், ரூ.3.31 லட்சத்தில் 27 பயனாளிகளுக்கு திறன் பேசிகள், ரூ.2.04 லட்சத்தில் 32 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள், ரூ.1.65 லட்சத்தில் 50 பயனாளிகளுக்கு காதொலிக் கருவிகள் என மொத்தம் ரூ.16.50 லட்சத்தில் 118 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மேலும், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் மூலம் ஓட்டுநா் பயிற்சி பெற்றவா்களுக்கு ஓட்டுநா் உரிம சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா், திட்ட இயக்குநா் (ஊரக வளா்ச்சி முகமை) ஸ்ரீதேவி, திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) லோகநாயகி, மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியா் நரேந்திரன், தாம்பரம் வருவாய் கோட்டாட்சியா் முரளி, செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியா் ரம்யா, மாவட்ட வழங்கல் அலுவலா் வெங்கடாசலம், தனித்துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்பு திட்டம்) பரிமளா, பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் நல அலுவலா் சுந்தா், துணை ஆட்சியா் (பயிற்சி) மணியரசன், முன்னோடி வங்கிகளின் மேலாளா் விஜயகுமாா், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயகுநா் சுப்பிரமணியன் கலந்து கொண்டனா்.