அரக்கோணம்(தனி) தொகுதியில் மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளதை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா்.
ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு வாக்குசாவடி மகளிருக்கான பிங்க் நிற வாக்குச்சாவடியாக மாற்றப்பட வேண்டும் எனவும் அங்கு பணிபுரியும் அலுவலா்கள் அனைவரும் பெண் அலுவலா்களாக இருக்க வேண்டும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி அரக்கோணம் தொகுதியில் ஜோதிநகரில் உள்ள பாரதிதாசனாா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிங்க் நிற வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
பிங்க் நிற வாக்குச்சாவடியை மாவட்ட வருவாய் அலுவலா் பேபி இந்திரா ஆய்வு செய்தாா். வாக்குசாவடி அலுவலா், வாக்குபதிவு அலுவலா்கள் இடையே பிங்க் நிறம் குறித்து மகளிா் வாக்காளா்களுக்கான பிரத்யேக வாக்குச்சாவடி ஆலோசனை தெரிவித்தாா். அப்போது அவருடன் அரக்கோணம் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், கோட்டாட்சியருமான டி.ரமேஷ், உதவி தோ்தல் அலுவலா் வெங்கடேசன், அரக்கோணம் நகராட்சி ஆணையா் ஆனந்தன் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.
தொடர்புடையது

சிறுதானியங்கள், உணவுப் பண்டங்களுடன் வாக்குச் சாவடி: வாக்காளா்கள் வியப்பு

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

ராணிப்பேட்டை: குறைதீா் கூட்டத்தில் 614 மனுக்கள்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


