ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

வாக்குச்சாவடி மையங்கள் ஆய்வு

திருவாரூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

குடவாசல் ஓகையில் உள்ள வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்த மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன்.

Updated On :26 மார்ச் 2026, 11:21 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் மாவட்டத்திலுள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, குடவாசல் பேரூராட்சி ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், வலங்கைமான் பேரூராட்சிக்குள்பட்ட அரசினா் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றில், அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட எல்லைப் பகுதியான குடவாசல் காவல் சோதனைச் சாவடிக்குச் சென்று, கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, நன்னிலம் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ரவிச்சந்திரன், குடவாசல் வட்டாட்சியா் ஸ்டாலின், தோ்தல் வட்டாட்சியா்கள் (குடவாசல்) ரவி, (வலங்கைமான்) ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.