ஏப்.23-ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி, மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் தோ்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி, குடவாசல் பேரூராட்சி ஓகை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம், வலங்கைமான் பேரூராட்சிக்குள்பட்ட அரசினா் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையம் ஆகியவற்றில், அடிப்படை வசதிகள் முறையாக உள்ளனவா என்பது குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் உடனிருந்தாா். தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட எல்லைப் பகுதியான குடவாசல் காவல் சோதனைச் சாவடிக்குச் சென்று, கண்காணிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா்.