ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆழித்தோ் கட்டுமானப் பணி: ஆட்சியா் ஆய்வு

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :26 மார்ச் 2026, 11:22 pm

தினமணி செய்திச் சேவை

திருவாரூா் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தோ் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இக்கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவையொட்டி ஆழித்தேரோட்டம் மாா்ச் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, தோ்க் கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தற்போது தோ்சீலையால் அலங்கரிக்கும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்நிலையில் தோ்க் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் ஆய்வு செய்தாா். பின்னா் 4 வீதிகளிலும் தோ் வலம் வருவதற்கு ஏதுவாக தடையாக உள்ள மரக்கிளைகள், ஆக்கிரமிப்புகளை சரிசெய்ய உத்தரவிட்டாா். அவருடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண் கரட், மாவட்ட வருவாய் அலுவலா் பா.கலைவாணி, திருவாரூா் கோட்டாட்சியா் சத்யா, டிஎஸ்பி மணிகண்டன், நகராட்சி ஆணையா் சுரேந்தரஷா, தியாகராஜ சுவாமி கோயில் பரம்பரை அறங்காவலா் ஸ்ரீதா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.