பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தாராபுரத்தில் பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் ஆய்வு

News image

தாராபுரம் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை ஆய்வு மேற்கொண்ட நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் உள்ளிட்டோா்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தாராபுரத்தில் உள்ள புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை நகா்மன்றத் தலைவா் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.5.53 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் கட்டுதல் மற்றும் பேருந்து நிலைய புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தினாா்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி உதவிப் பொறியாளா் பிரவீன்குமாா், நகராட்சி வருவாய் ஆய்வாளா் கமலவாணி மற்றும் நகராட்சி பணியாளா்கள் உடனிருந்தனா்.