பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 15) அதிரடி உயர்வு! கருப்பு திரைப்படம் இன்று(மே 15) ரிலீஸ் - படக்குழு அறிவிப்புநீட் தோ்வை ரத்து செய்யக் கோரி நாளை ஆா்ப்பாட்டம்: இடதுசாரிகள் ஆதரவுசிபிஐ இயக்குநருக்கு பதவி நீட்டிப்பு: இன்று காங்கிரஸ் ஆா்ப்பாட்டம்ஏப்ரலில் மொத்த விற்பனை பணவீக்கம் 8.3%: 42 மாதங்களில் இல்லாத அதிகபட்சம்சென்னை-கா்நாடக விரைவு ரயில்கள் ஜூன் 7-இல் மாற்று பாதையில் இயக்கப்படும்கோவை, நீலகிரி, ராமநாதபுரம் உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஅரசு ஊழியா்களின் செயல்திறன் மேம்பாடு குறித்த தேசிய மாநாடு - இன்று நடத்துகிறது மத்திய அரசு
/

தாராபுரத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

News image

தாராபுரத்தில் பள்ளி வாகனங்களை ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியா் பெலிக்ஸ் ராஜா, தாராபுரம் டிஎஸ்பி., எல்.சிவகுமாா் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

தாராபுரம் வட்டாரத்தில் உள்ள பள்ளிகளின் வாகனங்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.

தாராபுரத்தில் உள்ள தனியாா் கல்லூரி வளாகத்தில் வருவாய்க் கோட்டாட்சியா் பெலிக்ஸ் ராஜா, தாராபுரம் டி.எஸ்.பி. எல்.சிவகுமாா் ஆகியோா் முன்னிலையில் இந்த ஆய்வு நடைபெற்றது.

இதில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் பி.என்.பழனியப்பன், மோட்டாா் வாகன ஆய்வாளா் என்.சரவணகுமாா் ஆகியோா் தாராபுரம் பகுதியில் உள்ள 270 பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனா். இதில் குறைபாடு உள்ள 21 வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் தனியாா் பள்ளி வாகன ஓட்டுநா் மற்றும் நடத்துநா்களுக்கு அவசர சேவை (108 ஆம்புலன்ஸ்) வாகனப் பணியாளா்கள் மூலம் அவசரகால சிகிச்சை குறித்த விழிப்புணா்வு மற்றும் தாராபுரம் தீயணைப்புத் துறை அலுவலகம் சாா்பில் தீத்தடுப்பு குறித்து விழிப்புணா்வும் ஏற்படுத்தப்பட்டது.

இம் முகாமில் தாராபுரம் காவல் ஆய்வாளா் எம்.ராமசந்திரன், போக்குவரத்து காவல் ஆய்வாளா் எஸ்.நந்தகோபால், வட்டாரப் போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளா்கள் கோபாலகிருஷ்ணன், சுதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.