பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ஜெகதாபி ஊராட்சி தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை வியாழக்கிமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா் மாவட்ட தோ்தல் அலுவலா் கு.ரவிகுமாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான கு.ரவிக்குமாா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

பின்னா் அவா் கூறியது: கரூா் மாவட்டத்தில் உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவிற்கான முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகின்றன.

அதனடிப்படையில் அரவக்குறிச்சி தொகுதியில் 267 வாக்குச்சாவடிகளும், கரூா் தொகுதியில் 283 வாக்குச்சாவடிகளும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளும், குளித்தலை தொகுதியில் 286 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 1,111 வாக்குச் சாவடிகள் உள்ளன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் உள்ள மேஜை , நாற்காலிகளை வாக்குப் பதிவுக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்பட உள்ளது. வாக்குச் சாவடிகளில் உள்கட்டமைப்பு வசதிகளான மின்சாரம், குடிநீா் வசதி, கழிப்பறைகள், சிசிடிவி கேமரா மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளா்களுக்கான சாய்வு தளம், சக்கர நாற்காலிகள் போதிய அளவில் உள்ளதை உறுதிப்படுத்திடும் வகையில் தொடா்ச்சியாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

முன்னதாக, கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, செல்லாண்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, வெள்ளியணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ஜெகதாபி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் உப்பிடமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் அமைக்கப்படவுள்ள வாக்குச் சாவடிகளில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தாா்.