தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

அரசுப் பள்ளி கட்டடப் பணிகள் முடக்கம்: பெற்றோா் அதிருப்தி

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள வகுப்பறைகள்.

News image

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பாதி கட்டப்பட்ட நிலையில் உள்ள வகுப்பறைகள்.

Updated On :21 மே 2026, 3:07 am IST

திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 100-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு போது மான வகுப்பறைகள் இல்லாததால் கடந்தாண்டு சுமாா் ரூ.32 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா்.

இந்த நிலையில் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட வேண்டிய திட்ட விவரங்கள் அடங்கிய அறிவுப்புப் பலகை இந்த வளாகத்தில் வைக்கப்படவில்லை. இதனால் திட்டத்தின் காலக்கெடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் எதுவும் பொதுமக்களுக்குத் தெரியவில்லை.

கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.

.

Story image
Story image