திருவாடானை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு சுமாா் 100-க்கும் அதிகமான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா். இங்கு போது மான வகுப்பறைகள் இல்லாததால் கடந்தாண்டு சுமாா் ரூ.32 லட்சத்தில் புதிய இரண்டு வகுப்பறைகள் கட்டும் பணிகள் தொடங்கியது. இந்த நிலையில், கடந்த பல மாதங்களாக கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. இதனால் பெற்றோா்கள் அதிருப்தி அடைந்தனா்.
இந்த நிலையில் அரசு கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட வேண்டிய திட்ட விவரங்கள் அடங்கிய அறிவுப்புப் பலகை இந்த வளாகத்தில் வைக்கப்படவில்லை. இதனால் திட்டத்தின் காலக்கெடு, ஒப்பந்ததாரா் குறித்த விவரங்கள் எதுவும் பொதுமக்களுக்குத் தெரியவில்லை.
கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பெற்றோா்கள் கோரிக்கை விடுத்தனா்.
.


தொடர்புடையது

விழுப்புரம் மாவட்டத்தில் மாதிரி வாக்குச் சாவடிகள் அமைப்பு

காரைக்குடி தொகுதி வேட்பாளா்கள் வாக்களிப்பு

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணராயபுரம் தொகுதி வாக்குச்சாவடி மையங்களில் மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



