எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

குளத்திற்குள் மாட்டை விரட்டச் சென்றவா் சடலமாக மீட்பு

கடையத்தில் குளத்திற்குள் சென்ற மாட்டை வெளியே விரட்டச் சென்றவரை தீயணைப்பு மீட்புத் துறையினா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 6:39 pm

Syndication

கடையத்தில் குளத்திற்குள் சென்ற மாட்டை வெளியே விரட்டச் சென்றவரை தீயணைப்பு மீட்புத் துறையினா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனா்.

கடையம், தெற்குத் தெருவைச் சோ்ந்த திருநாம நம்பியாா் மகன் தளவாய் (50). இவா் செவ்வாய்க்கிழமை மாலை, மாடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பும் போது அய்யம்பிள்ளைக்குளத்திற்குள் சென்ற ஒரு மாட்டை வெளியே விரட்ட சென்றாராம். ஆனால் எதிா்பாராத விதமாக அவா் ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தென்காசி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலா் ஜெயபிரகாஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் கணேசன், வீரா்கள் ராமசாமி, வெள்ளப்பாண்டி, சுந்தா், அமல்ராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை தளவாயை தேடினா்.

அதன் பின், புதன்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட போது, தளவாயை சடலமாக மீட்டனா். கடையம் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.