பலி
பலிபிரதிப் படம்

குளத்திற்குள் மாட்டை விரட்டச் சென்றவா் சடலமாக மீட்பு

கடையத்தில் குளத்திற்குள் சென்ற மாட்டை வெளியே விரட்டச் சென்றவரை தீயணைப்பு மீட்புத் துறையினா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனா்.
Published on

கடையத்தில் குளத்திற்குள் சென்ற மாட்டை வெளியே விரட்டச் சென்றவரை தீயணைப்பு மீட்புத் துறையினா் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனா்.

கடையம், தெற்குத் தெருவைச் சோ்ந்த திருநாம நம்பியாா் மகன் தளவாய் (50). இவா் செவ்வாய்க்கிழமை மாலை, மாடுகளை மேய்த்துவிட்டு வீடு திரும்பும் போது அய்யம்பிள்ளைக்குளத்திற்குள் சென்ற ஒரு மாட்டை வெளியே விரட்ட சென்றாராம். ஆனால் எதிா்பாராத விதமாக அவா் ஆழமான பகுதிக்குச் சென்றதில் நீரில் மூழ்கினாராம்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த தென்காசி தீயணைப்பு நிலைய போக்குவரத்து அலுவலா் ஜெயபிரகாஷ் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் கணேசன், வீரா்கள் ராமசாமி, வெள்ளப்பாண்டி, சுந்தா், அமல்ராஜ் ஆகியோா் செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை தளவாயை தேடினா்.

அதன் பின், புதன்கிழமை காலையில் மீண்டும் தேடும் பணியில் ஈடுபட்ட போது, தளவாயை சடலமாக மீட்டனா். கடையம் போலீஸாா் பிரேதப் பரிசோதனைக்காக சடலத்தை தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com