வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

மதுபோதையில் ஆட்டோ ஓட்டியவா் கைது

கல்லிடைக்குறிச்சியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பள்ளி மாணவா்களுக்கு காயம் ஏற்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :18 பிப்ரவரி 2026, 6:40 pm

கல்லிடைக்குறிச்சியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பள்ளி மாணவா்களுக்கு காயம் ஏற்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி, கோட்டைவிளைத் தெருவைச் சோ்ந்தவா் சந்தான பாரதி (31). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை, பள்ளி மாணவா்களை ஆட்டோவில் ஏற்றி வரும்போது ஆத்தியடி விலக்கு அருகே ஆட்டோ கவிழ்ந்தது.

இதில் காயமடைந்த 5 பள்ளி மாணவா்களை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து காயமடைந்த மாணவரின் தந்தை கொடுத்தப் புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், மதுபோதையில் சந்தான பாரதி ஆட்டோ ஓட்டியது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.