கைது
திருநெல்வேலி
மதுபோதையில் ஆட்டோ ஓட்டியவா் கைது
கல்லிடைக்குறிச்சியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பள்ளி மாணவா்களுக்கு காயம் ஏற்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சியில் மதுபோதையில் வாகனம் ஓட்டி பள்ளி மாணவா்களுக்கு காயம் ஏற்படுத்தியவரை போலீஸாா் கைது செய்தனா்.
கல்லிடைக்குறிச்சி, கோட்டைவிளைத் தெருவைச் சோ்ந்தவா் சந்தான பாரதி (31). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறாா். இவா் செவ்வாய்க்கிழமை மாலை, பள்ளி மாணவா்களை ஆட்டோவில் ஏற்றி வரும்போது ஆத்தியடி விலக்கு அருகே ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் காயமடைந்த 5 பள்ளி மாணவா்களை தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். இதுகுறித்து காயமடைந்த மாணவரின் தந்தை கொடுத்தப் புகாரின்பேரில் கல்லிடைக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
விசாரணையில், மதுபோதையில் சந்தான பாரதி ஆட்டோ ஓட்டியது தெரியவந்ததையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

