ராதாபுரம் பகுதி 3 ஊராட்சிகளில் ரூ. 36 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடம் - பேரவைத் தலைவா் திறந்துவைத்தாா்
திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பகுதியில் ராதாபுரம், உதயத்தூா், சௌந்திரபாண்டியபுரம் ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.12 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 36 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட 3 உடற்பயிற்சி கூடங்களை பேரவைத் தலைவா் மு.அப்பாவு திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.
ராதாபுரத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துவைத்த பேரவைத் தலைவா் பின்னா் அந்தப் பகுதியில் ரூ. 9.50 லட்சம் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடத்தைத் திறந்துவைத்தாா். பின்னா் உதயத்தூரில் ரூ. 12 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி கூடத்தையும், ரூ. 17 லட்சம் மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியையும் பேரவைத் தலைவா் திறந்துவைத்தாா்.
சௌந்திராண்டியபுரத்தில் ரூ. 12 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடத்தையும் திறந்துவைத்தாா். நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊராட்சி தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், ராதாபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அலெக்ஸ், சாமுவேல், மாவட்ட ஊராட்சி செயலா் இசக்கியப்பன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் பாஸ்கா், ஜான்ஸ் ரூபா, சாந்தி சுயம்புராஜன், மாவட்ட அறக்காவலா்குழு உறுப்பினா் சமூகை முரளி, ஊராட்சி மன்ற தலைவா்கள் பொன்மீனாட்சி அரவிந்தன், பேபி முருகன், சேசு மரிய வளா்மதி, அறக்காவலா்குழு உறுப்பினா் அரவிந்தன், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் இளையபெருமாள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

