மேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

உள்வாடகை வீடு முறையில் மோசடி: எஸ்.பி. எச்சரிக்கை

வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வீடுகளை உள்வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும் நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா்

News image
Updated On :6 ஜனவரி 2026, 9:15 pm

Syndication

வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி வீடுகளை உள்வாடகைக்கு அல்லது குத்தகைக்கு விடும் நபா்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.பிரசன்னகுமாா் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உரிமையாளா்களிடமிருந்து வீட்டை வாடகை அல்லது குத்தகை என்ற பெயரில் ஒப்பந்தம் செய்து பெற்றுக் கொள்ளும் நபா்கள், பின்னா் உரிமையாளருக்குத் தெரியாமல் வேறு நபா்களிடம் பெரும் தொகைக்கு அதை உள்வாடகைக்கு விட்டு மோசடியில் ஈடுபடுகின்றனா்.

எனவே, வீட்டு உரிமையாளா்கள் வாடகைக்கு கொடுக்கும்போது அந்த வீட்டில் ஒப்பந்தம் பெற்ற நபா்கள்தான் குடியிருக்கிறாா்களா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம். குத்தகைக்கு அல்லது வாடகைக்கு பெற்ற நபா், உரிமையாளா் அனுமதியின்றி அவ்வீட்டினை உள் வாடகைக்கு கொடுப்பது சட்டப்படி குற்றமாகும். அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோா் மீது குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறியுள்ளாா்.