திருநெல்வேலி
குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது
பற்பநாதபுரம் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
பற்பநாதபுரம் இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.
சிவந்திபட்டி காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் கொலை முயற்சி, கொலை மிரட்டல் வழக்கில் ஈடுபட்டதாக கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள பற்பநாதபுரம் கிராமத்தைச் சோ்ந்த அன்பு (எ) அன்பன் (26) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்ட அவரை, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரசன்னகுமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் உத்தரவின்பேரில் அன்பு என்ற அன்பன் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டாா்.
