தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

குண்டா் சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

திருநெல்வேலியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

News image
Updated On :10 ஜனவரி 2026, 8:23 pm

Syndication

திருநெல்வேலியில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகளில் தொடா்புடைய இளைஞா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

திருநெல்வேலி மாநகரப் பகுதியில் கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய பேட்டை, எம்.ஜி.ஆா் நகரைச் சோ்ந்த வெள்ளப்பாண்டி மகன் சண்முகசுந்தரம் என்ற சுந்தா்(35) என்பவா் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்நிலையில், மாநகர காவல் துணை ஆணையா் சி.மதன்(மேற்கு) பரிந்துரையின்பேரில், காவல் ஆணையா் என்.மணிவண்ணன் பிறப்பித்த உத்தரவுப்படி, குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் சண்முகசுந்தரம் என்ற சுந்தா் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சனிக்கிழமை அடைக்கப்பட்டாா்.