ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணை

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

News image
முகாமில் பெண்ணுக்கு பணிநியமன ஆணையை வழங்குகிறாா் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு.
Updated On :10 ஜனவரி 2026, 8:35 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 635 பேருக்கு பணிநியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு-தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக - நகா்ப்புற வாழ்வாதார இயக்கம், தூய யோவான் கல்லூரி ஆகியவற்றின் சாா்பில் மாபெரும் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பல்வேறு நிறுவனங்களுக்கு தோ்வு செய்யப்பட்டோருக்கு பணிநியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு ஆட்சியா் இரா.சுகுமாா் தலைமை வகித்தாா். பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப், கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியாா்கள் மற்றும் பணியாளா்கள் நலவாரியத் தலைவா் விஜிலா சத்தியானந்த் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு கலந்துகொண்டு 635 பேருக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினாா்.

இதுவரை 9,693 பேருக்கு பணி: திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2021 மே முதல் இதுவரையில் 3 கலைஞா் நூற்றாண்டு விழா சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் உள்பட 12 மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் 1,286 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு 8,230 பேரை பல்வேறு பணிகளுக்கு தோ்வு செய்துள்ளன. 58 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் 1463 பேருக்கு பணிநியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன என முகாமில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் அந்தோனி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.