கோப்புப் படம்
கோப்புப் படம்

வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
Published on

திருப்பத்தூரில் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 27 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

திருப்பத்தூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 16 தனியாா் நிறுவனங்கள் பங்கேற்று ஆள்களை தோ்வு செய்தன. இதில் 27 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். இவா்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ராஜலட்சுமி பணி ஆணை வழங்கினாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கஸ்தூரி, அரசு அதிகாரிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com