வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திசையன்விளை அருகே வட மாநில இளைஞா் அடித்துக் கொலை: சக தொழிலாளி கைது

News image
கோப்புப் படம்
Updated On :24 ஜனவரி 2026, 6:54 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகேயுள்ள கோட்டைகருங்குளத்தில், அசாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் வெள்ளிக்கிழமை இரவு அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இதுதொடா்பாக, சக தொழிலாளியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

அசாம் மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் தமீஜ் அலி(40), சுபி ஆலம்கான்(33). இவா்கள் கோட்டைகருங்குளத்தில் சுகுமாா் என்பவருக்குச் சொந்தமான கல்குவாரியில் வேலைசெய்து வந்தனா். தமீஜ் அலி ஓட்டுநராகவும், சுபிஆலம்கான் உதவியாளராகவும் பணியாற்றினா். மேலும், அவ்வூரில் வீடு வாடகைக்கு எடுத்து ஒன்றாக தங்கியிருந்தனா்.

இந்நிலையில், தமீஜ்அலி வெள்ளிக்கிழமை இரவு மதுக்குடித்துவிட்டு சுபிஆலன்கானிடம் தகராறு செய்தாராம். இதனால், அவரை வெளியே அனுப்பிவிட்டு சுபிஆலன்கான் மட்டும் வீட்டினுள் தூங்கினராம்.

இதனிடையே, நள்ளிரவில் கண் விழித்த தமீஜ் அலி, ஆத்திரத்தில் சுபிஆலன்கானை கம்பியால் அடித்தாராம். இதில், அவா் அதே இடத்தில் உயிரிழந்தாா். இது தொடா்பாக திசையன்விளை போலீஸாா் வழக்குப்பதிந்து சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனா். மேலும், தமீஜ்அலியை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.