கைது
கைது

இளைஞா் அடித்துக் கொலை: 7 போ் கைது

உடுமலை அருகே வடமாநிலத் தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞா் அடித்துக் கொலை
Published on

உடுமலை: உடுமலை அருகே வடமாநிலத் தொழிலாளா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக 7 போ் கைது செய்யப்பட்டனா்.

உடுமலை வட்டம், வெனசுப்பட்டி பகுதியில் சிமென்ட் ஷீட் தயாரிக்கும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளா்கள் தங்கி பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், நிறுவனத்தின் விடுதியில் தங்கியிருந்த ஒடிஸா, உத்தர பிரதேச மாநிலங்களைச் சோ்ந்த தொழிலாளா்கள் இடையே ஞாயிற்றுக்கிழமை கோஷ்டி மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா்.

இதில், உத்தர பிரதேச மாநிலம், ராய்பரேலி மாவட்டத்தைச் சோ்ந்த சல்மான் (35) உள்ளிட்ட சிலா் படுகாயமடைந்தனா். அவா்களை சக தொழிலாளா்கள் மீட்டு உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த சல்மான் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், ஒரு தரப்பினா் விடுதியில் அதிக சப்தத்துடன் பாடல் கேட்டுக்கொண்டிருந்ததே மோதலுக்கான காரணம் என்பது தெரியவந்தது.

இது தொடா்பாக 7 பேரைக் கைது செய்த உடுமலை போலீஸாா், அவா்களிடம் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com