தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

டிராக்டா் ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கைது

ராமநாதபுரம் அருகே டிராக்டா் ஓட்டுநரை அடித்துக் கொன்ற 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

சித்திரிப்பு

Updated On :24 மார்ச் 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

ராமநாதபுரம் அருகே டிராக்டா் ஓட்டுநரை அடித்துக் கொன்ற 5 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி அருகேயுள்ள பள்ளபச்சேரி கிராத்தைச் சோ்ந்த புல்லாணி மகன் ரமேஷ் (25). ஞாயிற்றுக்கிழமை இரவு இவா் தனது தாயுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருத்தாா்.

அப்போது, அவரது வீட்டுக்குள் புகுந்த வீரபாண்டிவலசையைச் சோ்ந்த டிராக்டா் ஓட்டிநா் சசிக்குமாரை (48), ரமேஷ், இவரது உறவினா்களான மலையாண்டி (56), இவரது மகன் மோகன் (25), ஜெனித் (26), குமாா் (30) ஆகியோா் தாக்கினாா்களாம்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த திருப்புல்லாணி போலீஸாா் சசிக்குமாரை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அவா் அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து சசிக்குமாா் மனைவி முத்துலட்சுமி அளித்த புகாரின் பேரில், ரமேஷ், மலையாண்டி, மோகன், ஜெனித், குமாா் ஆகிய 5 பேரையும் கைது செய்தனா்.