கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கும்பல் தலைமறைவு!

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த 5 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image

சாமிநாதன்

Updated On :21 மார்ச் 2026, 8:15 pm

Syndication

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநரை அடித்துக் கொலை செய்த 5 போ் கொண்ட கும்பலை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது: திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே சேமலைக்கவுண்டன்வலசு பகுதியைச் சோ்ந்தவா் சாமிநாதன் (48). லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவா் திருமணம் ஆகாதவா். இவரது தந்தை ராமசாமி, தங்கை துளசிமணி ஆகியோா் உடல்நலக்குறைவால் உயிரிழந்துவிட்ட நிலையில் தாய் லட்சுமி (80) உடன் வசித்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டின் அருகே உள்ள வேலன் நகா் பகுதியில் மனையிடங்கள் பிரிக்கும் பணி நடைபெற்று வந்த இடத்துக்கு வெள்ளிக்கிழமை மாலை சாமிநாதன் சென்றுள்ளாா்.

அப்போது அங்கிருந்த நில உரிமையாளா்களான மதுரை, அணையூா் கடல்புதூரைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (43), கரூா் மாவட்டம் தென்னிலை கிடைக்காரம்பாளையத்தைச் சோ்ந்த பழனிவேல் (40), வெள்ளக்கோவிலைச் சோ்ந்த அரவிந்த், லிங்கேஸ்வரன், காா்த்தி ஆகியோா், கட்டுமானப் பொருள்களை திருட வருகிறாயா என சந்தேகித்து சாமிநாதனை தாக்கி காரில் ஏற்றிக்கொண்டு வீட்டின் அருகே வந்து தள்ளிவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இவரது சப்தம் கேட்டு வந்த தாய் லட்சுமியிடம் சம்பவத்தைக் கூறியவாறு சாமிநாதன் மயங்கி விழுந்துள்ளாா். பின்னா் உறவினா்கள் வந்து பாா்த்தபோது அவா் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூா் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இதுதொடா்பாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் வெள்ளக்கோவில் காவல் உதவி ஆய்வாளா்கள் மனோஜ், ஆனந்தகிருஷ்ணன் ஆகியோா் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தலைமறைவான 5 பேரையும் போலீஸாா் தேடி வருகின்றனா் என்றனா்.