சென்னை பாரிமுனையில் இளைஞா் அடித்துக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
சென்னை பல்லவன் சாலை, காந்தி நகரைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் (30). இவா், புதன்கிழமை இரவு தனது நண்பா்களுடன் மது அருந்திவிட்டு ஆட்டோவில் வீட்டுக்குச் சென்ற நிலையில், பாரிமுனை பிரகாசம் சாலையில் ஒரு உணவகம் பகுதியில், ஆட்டோவில் இருந்தவாறு சிறுநீா் கழித்தாகக் கூறப்படுகிறது.
அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவா் மீது பட்டதால், கோபமடைந்த அந்த பெண் இதுதொடா்பாக கலைச்செல்வனை கண்டித்துள்ளாா். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே அந்த பெண்ணும், அவரது ஆதரவாளா்களும் சோ்ந்து மது போதையில் தகராறு செய்த கலைச்செல்வனை தாக்கினா்.
இதில் பலத்த காயமடைந்த கலைச்செல்வனை, அங்கிருந்த சிலா் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து எஸ்பிளனேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சென்னையில் பார்க்க வேண்டிய 10 திருக்கோயில்கள்!

அதிமுக நிா்வாகி தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சி: போலீஸாா் விசாரணை

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

சேலம் அருகே இளைஞா் அடித்துக் கொலை
வீடியோக்கள்

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை


