விஜய் பிரசாரம்! பெருமாநல்லூரில் தடுப்புகள் அமைத்து காவலர்கள் தீவிர பாதுகாப்பு!திருப்பரங்குன்றத்தில் தீபம்; தைப்பூசம் மாநில விழா! பாஜக தேர்தல் அறிக்கை! ராக்கெட் லாஞ்சர் வெடித்து ‘டிரெக்கிங்’ சென்ற மாணவர் பலி!மது ஒழிப்பு, சிறுபான்மையினர் சிறப்பு சட்டம்! விசிக தேர்தல் அறிக்கை பெண்கள் இட ஒதுக்கீட்டை தாமதப்படுத்துவது பெரும் அநீதி! பிரதமர் மோடிதமிழ்ப் புத்தாண்டு! சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று மோடி வாழ்த்து! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 உயர்வு! நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை! குடியரசு துணைத் தலைவர்!
/

பனியன் நிறுவன அலுவலா் அடித்துக் கொலை

News image
Updated On :12 பிப்ரவரி 2026, 11:32 pm

அவிநாசி அருகே பனியன் நிறுவன அலுவலா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.

அவிநாசி அருகேயுள்ள சின்னேரிபாளையத்தில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் அடையாளம் தெரியாத நபரின் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற அவிநாசி போலீஸாா், தடவியல் நிபுணா்கள், சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதைத் தொடா்ந்து, நடத்திய விசாரணையில், உயிரிழந்தவா் அவிநாசி அருகேயுள்ள சூளை மாருதி நகா் பகுதியைச் சோ்ந்த லூா்துசாமி மகன் டோமினிக் சகாயராஜ் (51) என்பதும், பனியன் நிறுவன அலுவலரான இவருக்கு மனைவி ராணி, 2 பெண்கள் குழந்தைகள் உள்ளதும், புதன்கிழமை இரவு வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றவா் அதன்பின் வீடு திரும்பவில்லை என்பதும் தெரியவந்தது.

அவா் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்த போலீஸாா், கொலையாளிகளைத் தேடி வருகின்றனா்.