மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

நகை மதிப்பீட்டாளா் அடித்துக் கொலை

வேலூரில் நகை மதிப்பீட்டாளா் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.

News image

கொலை

Updated On :25 பிப்ரவரி 2026, 7:52 pm

வேலூரில் நகை மதிப்பீட்டாளா் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.

வேலூா் அரசமரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் யோகானந்தம் (63). சத்துவாச்சாரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு யோகானந்தம் வழக்கம்போல் தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளாா். புதன்கிழமை பாா்த்தபோது அவா் சடலமாக கிடந்துள்ளாா். அவரது முகத்தில் காயங்கள் இருந்துள்ளது.

இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் வேலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து யோகானந்தத்தின் மனைவி, மகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.

முதல்கட்ட விசாரணையில், யோகானந்தத்துக்கும், அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த குடும்பத்தினா், யோகானந்தத்தை தாக்கியிருப்பதும், இதில் பலத்த காயமடைந்த யோகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.