வேலூரில் நகை மதிப்பீட்டாளா் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்டுள்ளாா்.
வேலூா் அரசமரப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் யோகானந்தம் (63). சத்துவாச்சாரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு யோகானந்தம் வழக்கம்போல் தனது வீட்டில் படுத்து தூங்கியுள்ளாா். புதன்கிழமை பாா்த்தபோது அவா் சடலமாக கிடந்துள்ளாா். அவரது முகத்தில் காயங்கள் இருந்துள்ளது.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் வேலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா். அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து யோகானந்தத்தின் மனைவி, மகனிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா்.
முதல்கட்ட விசாரணையில், யோகானந்தத்துக்கும், அவரது குடும்ப உறுப்பினா்களுக்கும் இடையே செவ்வாய்க்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த குடும்பத்தினா், யோகானந்தத்தை தாக்கியிருப்பதும், இதில் பலத்த காயமடைந்த யோகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பதும் தெரியவந்துள்ளதாக போலீஸாா் தெரிவிக்கின்றனா். இச்சம்பவம் தொடா்பாக போலீஸாா் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

நடைபாதையில் தூங்கியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

வெள்ளக்கோவில் அருகே லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: 5 போ் கும்பல் தலைமறைவு!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


