நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நடைபாதையில் தூங்கியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:43 pm

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சேவியா் (48). தொழிலாளியான இவா், குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் வேலை செய்து வந்தாா். தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் படுத்து தூங்குவது வழக்கமாம். தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் புல்லாவெளியைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன் (38). இவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, அதே பகுதியில் படுத்து தூங்குவாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில், சரவணன் வழக்கமாக தூங்கும் இடத்தில் சேவியா் படுத்து தூங்கி விட்டாராம். சேவியரை வேறு இடத்தில் தூங்குமாறு சரவணன் கூறினாராம். சேவியா் மறுத்ததையடுத்து சரவணன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் அவரை தாக்கினாராம்.

தகவலறிந்து வந்த மத்தியபாகம் காவல் ஆய்வாளா் மோகன்அய்யா் தலைமையிலான போலீஸாா், பலத்த காயமடைந்த சேவியரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து சரவணனை போலீஸாா் கைது செய்தனா். சரவணன் மீது ஏற்கெனவே நடைபாதையில் தூங்கியவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.