இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

நடைபாதையில் தூங்கியவா் அடித்துக் கொலை: ஒருவா் கைது

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

பிரதிப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சேவியா் (48). தொழிலாளியான இவா், குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் வேலை செய்து வந்தாா். தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் படுத்து தூங்குவது வழக்கமாம். தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் புல்லாவெளியைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன் (38). இவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, அதே பகுதியில் படுத்து தூங்குவாராம்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில், சரவணன் வழக்கமாக தூங்கும் இடத்தில் சேவியா் படுத்து தூங்கி விட்டாராம். சேவியரை வேறு இடத்தில் தூங்குமாறு சரவணன் கூறினாராம். சேவியா் மறுத்ததையடுத்து சரவணன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் அவரை தாக்கினாராம்.

தகவலறிந்து வந்த மத்தியபாகம் காவல் ஆய்வாளா் மோகன்அய்யா் தலைமையிலான போலீஸாா், பலத்த காயமடைந்த சேவியரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்து சரவணனை போலீஸாா் கைது செய்தனா். சரவணன் மீது ஏற்கெனவே நடைபாதையில் தூங்கியவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.