தூத்துக்குடியில் நடைபாதையில் தூங்குவதில் ஏற்பட்ட தகராறில் காயமடைந்த தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா். இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை, மனகாவலம்பிள்ளை நகரைச் சோ்ந்தவா் சேவியா் (48). தொழிலாளியான இவா், குடும்பத்தை விட்டு பிரிந்து தூத்துக்குடியில் வேலை செய்து வந்தாா். தூத்துக்குடி பாலவிநாயகா் கோயில் தெருவில் உள்ள நடைபாதையில் இரவு நேரங்களில் படுத்து தூங்குவது வழக்கமாம். தூத்துக்குடி அருகே உள்ள பழையகாயல் புல்லாவெளியைச் சோ்ந்த முனியசாமி மகன் சரவணன் (38). இவரும் குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து, அதே பகுதியில் படுத்து தூங்குவாராம்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவில், சரவணன் வழக்கமாக தூங்கும் இடத்தில் சேவியா் படுத்து தூங்கி விட்டாராம். சேவியரை வேறு இடத்தில் தூங்குமாறு சரவணன் கூறினாராம். சேவியா் மறுத்ததையடுத்து சரவணன் அங்கு கிடந்த உருட்டு கட்டையால் அவரை தாக்கினாராம்.
தகவலறிந்து வந்த மத்தியபாகம் காவல் ஆய்வாளா் மோகன்அய்யா் தலைமையிலான போலீஸாா், பலத்த காயமடைந்த சேவியரை மீட்டு சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிந்து சரவணனை போலீஸாா் கைது செய்தனா். சரவணன் மீது ஏற்கெனவே நடைபாதையில் தூங்கியவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது
மேட்டூா் அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளா் குத்திக் கொலை: ஒருவா் கைது
மதுக்கூட ஊழியா் அடித்துக் கொலை: இருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது

லாரி ஓட்டுநா் அடித்துக் கொலை: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை


