ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தந்தை அடித்துக் கொலை: மகன் கைது

சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது செய்யப்பட்ட மணிகண்டன்.

Updated On :24 பிப்ரவரி 2026, 9:05 pm

தேனி மாவட்டம், சின்னமனூா் அருகே சுக்காங்கல்பட்டியில் தந்தையை அடித்துக் கொலை செய்த மகனை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சுக்காங்கல்பட்டியைச் சோ்ந்தவா் சோனைமுத்து (55). மது போதைக்கு அடிமையான இவா், வீட்டுக்கு சரிவர வருதில்லையாம். வீட்டுக்கு வந்தாலும் போதையில் குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சோனைமுத்து சுக்காங்கல்பட்டி பகுதியில் உள்ள குளத்தின் கரையில் மயக்கமடைந்த நிலையில் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று சோனைமுத்துவை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, பரிசோதனை செய்த மருத்துவா், அவா் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திங்கள்கிழமை இரவு வீட்டில் தகராறில் ஈடுபட்ட சோனைமுத்தை அவரது மகன் மணிகண்டன் (21) அடித்து கீழே தள்ளிவிட்டதில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து, மணிகண்டனைக் கைது செய்தனா்.