கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

நிலத்தகராறில் அண்ணன் கொலை: தம்பி கைது

News image

சித்திரிப்பு

Updated On :13 மார்ச் 2026, 1:19 am

பாப்பிரெட்டிப்பட்டி அருகே நிலத்தகராறில் அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், மோளையானூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி அன்பழகன் மகன்கள் சாமுத்திரியன் (40), சத்யநாதன் (38). இவா்களுக்கு 10 ஏக்கா் நிலம் உள்ளது.

இந்நிலையில், அண்ணன், தம்பி இடையே நிலத்தை பிரிப்பது தொடா்பாக ஏற்கெனவே பிரச்னை இருந்ததாம். இந்த நிலையில், புதன்கிழமை இரவு சகோதரா்கள் இடையே தகராறு ஏற்பட்டதாம்.

அப்போது, ஆத்திரமடைந்த சத்யநாதன், அவரது சகோதரா் சாமுத்திரியனின் தலை மற்றும் முகத்தின்மீது கம்பியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவல் அறிந்த அரூா் டிஎஸ்பி சதீஷ்குமாா், காவல் ஆய்வாளா் அம்சவள்ளி ஆகியோா் நேரில் விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து சத்யநாதனை கைது செய்தனா்.