சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது

வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 8:21 pm

வேதாரண்யம் அருகே அண்ணனை அடித்துக் கொலை செய்த தம்பியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

வேதாரண்யத்தை அடுத்த மருதூா் வடக்கு அரியக்கவுண்டா் காடு பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் மகன் அசோக் (40) திருமணம் ஆகாதவா். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மலேசியாவில் வேலை பாா்த்தபோது ஏற்பட்ட விபத்தில் இவரது இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டன. இதனால் நடக்க இயலாத சூழலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தாா். இவரது தம்பி ஆனந்த் (34). இவருக்கும் திருமணமாகவில்லையாம்.

மது பழக்கத்துக்கு அடிமையான ஆனந்த், அசோக்குடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா். வெள்ளிக்கிழமை இரவு இதுபோல ஏற்பட்ட தகராறில் ஆனந்த் தாக்கியதில் பலத்த காயமடைந்த அசோக் ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். கரியாப்பட்டினம் போலீஸாா் ஆனந்தை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.