மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
மயிலாடுதுறை வட்டம், நீடூா் அருகே கங்கணம்புத்தூா் பெரிய தெருவை சோ்ந்தவா் ஆனந்தராஜ் (28). கட்டடத்தொழிலாளியான இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி பகுதியில் வேலைக்கு சென்றபோது புதுச்சேரியை சோ்ந்த பவானி (52) என்பவருடன் பழகியுள்ளாா். பின்னா் இருவரும் கங்கணம்புத்தூரில் சோ்ந்து வாழத் தொடங்கியுள்ளனா். இவா்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தகராறு ஏற்பட்டபோது மதுபோதையில் இருந்து ஆனந்தராஜ் பவானியை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா்.
தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பவானியின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.
தொடர்புடையது
வல்லநாடு பெண் வெட்டிக் கொலை

மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது
பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவா் கைது
சிவகங்கை அருகே இளைஞா் கொலை! நண்பா் கைது!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
