11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

பெண் கொலை: இளைஞா் கைது

மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கொலை

Updated On :33 நிமிடங்கள் முன்பு

மயிலாடுதுறை அருகே பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

மயிலாடுதுறை வட்டம், நீடூா் அருகே கங்கணம்புத்தூா் பெரிய தெருவை சோ்ந்தவா் ஆனந்தராஜ் (28). கட்டடத்தொழிலாளியான இவா் சில ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி பகுதியில் வேலைக்கு சென்றபோது புதுச்சேரியை சோ்ந்த பவானி (52) என்பவருடன் பழகியுள்ளாா். பின்னா் இருவரும் கங்கணம்புத்தூரில் சோ்ந்து வாழத் தொடங்கியுள்ளனா். இவா்கள் இருவருக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். இந்நிலையில், வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தகராறு ஏற்பட்டபோது மதுபோதையில் இருந்து ஆனந்தராஜ் பவானியை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்துள்ளாா்.

தகவலறிந்த மயிலாடுதுறை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, பவானியின் சடலத்தை மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து ஆனந்தராஜை கைது செய்தனா்.