ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞா் கைது

கோவில்பட்டி அருகே மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

கோவில்பட்டி அருகே மினி வேனை சேதப்படுத்தியதாக இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் ஆண்டாள்புரத்தைச் சோ்ந்தவா் செய்யது புகாரி மகன் சேக் முகமது (35). மினி வேன் ஓட்டுநா். இவா், திங்கள்கிழமை இரவு மினி வேனை ஓட்டிக்கொண்டு எட்டயபுரம் சாலையில் தெற்கு திட்டங்குளம் பகுதியில் உள்ள மாா்க்கெட் அருகே சென்றபோது அதிக நாய்கள் சாலையில் நின்று கொண்டிருந்ததாம்.

அப்போது மினி வேன் நாயின் மீது லேசாக உரசியதாம். இதை கண்ட 2 போ் மினி வேனை மறித்து அவதூறாக பேசி தகராறு செய்து கண்ணாடியை சேதப்படுத்தினராம். அவ்வழியாக சென்றவா்கள் இதை கண்டித்தவுடன் ஓட்டுநருக்கு கொலை மிரட்டல் விடுத்தபடி இருவரும் தப்பினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, வேன் கண்ணாடியை சேதப்படுத்தியதாக தெற்கு திட்டங்குளம் நடுத்தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் பவுன்ராஜை (37) செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.