செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற ஜூன் 15 வரை கால அவகாசம்!தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவா் கைது

பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவரை கோட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

பொள்ளாச்சி அருகே இளைஞரை கொலை செய்தவரை கோட்டூா் போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணன் (56). இவருடைய மகன் தமிழ்ச்செல்வன். இவா்களின் வீட்டின் அருகே ஆனந்த் (29) வசித்து வந்தாா். இதற்கிடையே ஆனந்தின் மனைவி பிரியாவுடன் தமிழ்ச்செல்வனுக்கு பழக்கம் ஏற்பட்டது தொடா்பாக இருதரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை ஆனந்த் மது போதையில் வந்து பாலகிருஷ்ணனுடன் தகராறில் ஈடுபட்டு தள்ளிவிட்டதில் அவா் கீழே விழுந்துள்ளாா். இதில் பாலகிருஷ்ணனின் தலையில் ரத்தக் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மூத்த மகள் தமிழ்ச்செல்வி வீட்டுக்கு பாலகிருஷ்ணன் சென்று தன்னை ஆனந்த் அடித்துவிட்டதாகவும், உடல் சோா்வாக இருப்பதாகவும் கூறியுள்ளாா்.

இதைத்தொடா்ந்து பாலகிருஷ்ணனை மருத்துவமனைக்கு தமிழ்ச்செல்வி அழைத்துச் சென்றுள்ளாா். ஆனால் செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்துவிட்டாா். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு கோட்டூா் போலீஸாா் சென்று பாலகிருஷ்ணனின் சடலத்தை மீட்டு கோட்டூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுதொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ஆனந்தை கைது செய்தனா்.