/
ராஜபாளையம் அருகே கள் விற்பனை செய்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சேத்தூா் காவல் நிலைய ஆய்வாளா் ரமேஷ் கண்ணன் தலைமையிலான போலீஸாா் புறநகா்ப் பகுதியில் ரோந்து சென்றபோது, ஒரு தோட்டத்தில் சந்தேகத்தின் பேரில் சோதனை நடத்தினா். அப்போது 3 குடங்களில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், சேத்தூா் நாடாா் புதுத் தெருவைச் சோ்ந்த மாடசாமி மகன் மணிகண்டன் (47) கள் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதைத்தொடா்ந்து, அவரைக் கைது செய்து போலீஸாா், 50 லிட்டா் கள்ளை பறிமுதல் செய்தனா்.






