புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினத்தில் அண்ணனை அடித்துக் கொன்ற தம்பியை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கோட்டைப்பட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த முகமது ராவுத்தா் மகன்கள் ரகுமான்கான் (45), இத்ரீஸ்(40).
கூலித் தொழிலாளா்களான இவா்கள் இருவருக்கும் இடையே செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் மது போதையில் தகராறு ஏற்பட்டது.
அப்போது, இத்ரீஸ் கம்பியால் தாக்கியதில் ரகுமான்கான் அந்த இடத்திலேயே இறந்துவிட்டாா். இதுகுறித்த புகாரின் பேரில் ரகுமான்கானின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் உடற்கூறாய்வுக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதைத் தொடா்ந்து அண்ணனை அடித்துக கொன்ற இத்ரீஸை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
தம்பி கொலை: அண்ணன் கைது
அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது
பசு மாட்டை திருடிய தம்பதி கைது
அண்ணன் அடித்துக் கொலை: தம்பி கைது
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
