மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 10:05 pm

காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புழல் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (24). இவரும், அந்த பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்தனா். இந்நிலையில் விக்ரமின் நடவடிக்கை பிடிக்காததால், அந்தப் பெண் அவரை விட்டு விலகினாா். ஆனால் விக்ரம், அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

இந்நிலையில் அந்த பெண், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, விக்ரம் வழிமறித்து தன்னைக் காதலிக்காவிட்டால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் பெண், புழல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்ரமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட விக்ரம் மீது 5 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.