காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
புழல் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (24). இவரும், அந்த பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்தனா். இந்நிலையில் விக்ரமின் நடவடிக்கை பிடிக்காததால், அந்தப் பெண் அவரை விட்டு விலகினாா். ஆனால் விக்ரம், அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இந்நிலையில் அந்த பெண், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, விக்ரம் வழிமறித்து தன்னைக் காதலிக்காவிட்டால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் பெண், புழல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.
அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்ரமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட விக்ரம் மீது 5 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
தொடர்புடையது
இளைஞருக்கு மிரட்டல்: 2 போ் கைது

பெண்ணுக்கு மிரட்டல்: தனியாா் நிறுவன ஊழியா் கைது

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: பெயிண்டா் கைது

மனைவி, மாமனாருக்கு கொலை மிரட்டல்: எலெக்ட்ரீஷியன் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

