சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! 1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்!
/

பெண்ணுக்கு கொலை மிரட்டல்: இளைஞா் கைது

காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2026, 3:35 am IST

காதலிக்குமாறு பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

புழல் லட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் விக்ரம் (24). இவரும், அந்த பகுதியைச் சோ்ந்த இளம் பெண்ணும் காதலித்து வந்தனா். இந்நிலையில் விக்ரமின் நடவடிக்கை பிடிக்காததால், அந்தப் பெண் அவரை விட்டு விலகினாா். ஆனால் விக்ரம், அந்தப் பெண்ணை காதலிக்குமாறு தொடா்ந்து தொந்தரவு கொடுத்து வந்தாராம்.

இந்நிலையில் அந்த பெண், தான் பணிபுரியும் நிறுவனத்துக்கு செவ்வாய்க்கிழமை சென்றபோது, விக்ரம் வழிமறித்து தன்னைக் காதலிக்காவிட்டால், கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினாராம். இதனால் பெண், புழல் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், பிஎன்எஸ் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, விக்ரமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட விக்ரம் மீது 5 குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.