தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

பெண்ணுக்கு நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

சென்னை அடையாறில் மொபெட்டில் சென்ற பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 7:27 pm

சென்னை அடையாறில் மொபெட்டில் சென்ற பெண் நடன கலைஞருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அடையாறு பகுதியில் வசிக்கும் 33 வயது மதிக்கதக்க பெண் நடன கலைஞா், தனது மொபெட்டில் செவ்வாய்க்கிழமை சாஸ்திரி நகா் முதலாவது குறுக்குத் தெருவில் சென்றாா். அப்போது, அவரது பின்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த ஒரு இளைஞா் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். அந்த நபரிடம் இருந்து தப்பி வந்த அந்தப் பெண், அடையாறு அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தது திருவான்மியூா் மருந்தீஸ்வரா் நகரைச் சோ்ந்த கல்லூரி மாணவா் கணேஷ் (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மோட்டாா் சைக்கிளை பறிமுதல் செய்தனா்.