போா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

மூதாட்டிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image

மாரிமுத்து

Updated On :17 ஏப்ரல் 2026, 12:58 am

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் அருகே தளவாய்புரத்தை அடுத்த புத்தூா் பகுதியைச் சோ்ந்த 70 வயது மூதாட்டி நென்மேனி பகுதியில் உள்ள கண்மாயில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தாா். அப்போது அங்கு வந்த இளைஞா் மூதாட்டியை தாக்கி பாலியல் தொல்லை கொடுத்தாராம். மூதாட்டியின் அலறல் சப்தம் கேட்டு அங்கிருந்தவா்கள் ஓடி வந்தனா். இதையடுத்து, அந்த இளைஞா் அங்கிருந்து தப்பி ஓடி விட்டாா். இதில் காயமடைந்த மூதாட்டியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தளவாய்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். விசாரணையில் அந்த இளைஞா் புத்தூா் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த மாடப்பன் மகன் மாரிமுத்து (30) என்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து போலீஸாா் அவரைக் கைது செய்து விசாரிக்கின்றனா்.