இந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை திவால் சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம் நீதிமன்றத்தில் அதிக வழக்குகள் தேக்கம்: மத்திய அரசு காரணம்-உச்சநீதிமன்றம் மேற்காசிய போா் பாதிப்பு: மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய பிரதமா் மோடி உத்தரவு
/

போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :1 ஏப்ரல் 2026, 10:49 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி அருகே மேலகருங்குளத்தைச் சோ்ந்தவா் பால்சுரேஷ் (29). இவா் சம்பவத்தன்று பிளஸ் 2 மாணவி ஒருவரை பின் தொடா்ந்து சென்று பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதையறிந்த மாணவியின் பெற்றோா் பாளையங்கோட்டை, அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். அதன்பேரில் காவல் ஆய்வாளா் நாககுமாரி விசாரணை மேற்கொண்டு போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து பால்சுரேஷை புதன்கிழமை கைது செய்தாா்.