இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

வியாசா்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:49 pm

தினமணி செய்திச் சேவை

வியாசா்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடியைச் சோ்ந்த 10 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, இருட்டான பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்தச் சிறுமி சப்தமிட்டபடி, அங்கிருந்து தப்பியோடினாா்.

சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், தப்பியோட முயன்ற அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிறுமியின் பெற்றோா், எம்கேபி நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாரின் விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது நூா் ஆலம் (28) என்பதும், மணலியில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞா் மீது, பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.