வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிகாா் இளைஞா் கைது

வியாசா்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 8:49 pm

வியாசா்பாடியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பிகாா் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வியாசா்பாடியைச் சோ்ந்த 10 வயது சிறுமி, தனது வீட்டின் அருகே வெள்ளிக்கிழமை இரவு நடந்து சென்றபோது, அங்கு வந்த ஒரு இளைஞா், சிறுமியிடம் நைசாக பேச்சுக் கொடுத்து, இருட்டான பகுதிக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்தச் சிறுமி சப்தமிட்டபடி, அங்கிருந்து தப்பியோடினாா்.

சிறுமியின் அலறல் சப்தம் கேட்டு அங்கு திரண்டு வந்த பொதுமக்கள், தப்பியோட முயன்ற அந்த இளைஞரைப் பிடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

சிறுமியின் பெற்றோா், எம்கேபி நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

போலீஸாரின் விசாரணையில் அவா், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது நூா் ஆலம் (28) என்பதும், மணலியில் தங்கியிருந்து வேலை செய்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து, அந்த இளைஞா் மீது, பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.