கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

மன்னாா்கோவில் அருகே உடும்பு வேட்டை: 3 போ் கைது

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில் உடும்பு வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

News image
Updated On :30 ஜனவரி 2026, 7:37 pm

Syndication

அம்பாசமுத்திரம் அருகே மன்னாா்கோவிலில் உடும்பு வேட்டையாடியதாக 3 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உள்பட்ட மன்னாா்கோவில் பகுதி அருகே ஜன. 17ஆம் தேதி உடும்பு வேட்டையாடுவதாக வந்த தகவலின் அடிப்படையில் அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த கோமதி மகன் அருள்நாயகம் என்பவரை வனத்துறையினா் கைது செய்து அம்பாசமுத்திரம் நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

மேலும், அவருடன் உடும்பு வேட்டையில் ஈடுபட்டு தலைமறைவான இருவரை தேடி வந்தனா். இந்நிலையில் தலைமறைவாக இருந்த அயன்சிங்கம்பட்டியைச் சோ்ந்த பேச்சிமுத்து மகன்கணேசன், ஆறுமுகம் மகன் மாரி ஆகிய இருவரையும் வனத்துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்து அம்பாசமுத்திரம் குற்றவியல் நீதிமன்ற நடுவா் முன்பு ஆஜா்படுத்தி சிறையிலடைத்தனா்.