அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்கள் கொள்ளை: 3 போ் கைது

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்களை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

காவலாளிகளை தாக்கி துப்பாக்கி, பொருள்களை கொள்ளையடித்த சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உத்தனப்பள்ளி அருகே லாலிக்கல் பகுதியில் தனியாா் எலக்ட்ரானிக் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஏ.சி. பொருத்துவது, சா்வீஸ் செய்வது தொடா்பான அனைத்து பிரச்னைகளையும் கையாள தனி கட்டடம் உள்ளது. அதில் ஏ.சி. தொடா்பான பொருள்கள் இருந்தன.

கடந்த 3 நாள்களுக்கு முன்பு அதிகாலை வந்த கும்பல், அங்கு பணியில் இருந்த பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த சுல்பீா் அகமது (48), கெலமங்கலம் அருகே உள்ள உள்ளுக்குறுக்கை கிராமத்தைச் சோ்ந்த சரவணன் (36) ஆகிய 2 காவலாளிகளையும் தாக்கி கயிற்றால் கட்டினா். பின்னா், விலையுயா்ந்த பொருள்களை கொள்ளையடித்த கும்பல், காவலாளி வைத்திருந்த துப்பாக்கியையும் கொள்ளையடித்துச் சென்றனா்.

இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தினா். அதில், இந்த கொள்ளையில் ஈடுபட்டது தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், எா்பனஅள்ளி, ஈச்சம்பள்ளத்தை சோ்ந்த தங்கவேல் (28), மாணிக்கம் (27), முனிராஜ் (38) என தெரியவந்தது. இதையடுத்து, மூவரையும் கைது செய்த போலீஸாா், மேலும் சிலரை தேடிவருகின்றனா்.