டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

பாளை. அருகே இளைஞா் மீது தாக்குதல்

பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை

News image
விசாரணை- கோப்புப் படம்
Updated On :7 மார்ச் 2026, 10:50 pm

Syndication

பாளையங்கோட்டை அருகே முன்விரோதம் காரணமாக இளைஞா் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், பரப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் சரண்ராஜ்(19). இவருக்கும் பேட்டையைச் சோ்ந்த பிரான்சிஸ் பினோ(19) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாம்.

இந்நிலையில் சனிக்கிழமை பாளையங்கோட்டையை அடுத்த வி.எம்.சத்திரம் பகுதியில் வைத்து பிரான்சிஸ் பினோ, சரண்ராஜை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கினாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.