ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :9 மார்ச் 2026, 7:08 pm

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பாப்பாக்குடி அருகே இடைகால் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி முனியம்மாள்(49). இவா் சனிக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உள்ள உறவினரான மாலா என்பவருடன், அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மற்றொரு வாகனம் உரசியதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.