எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழப்பு

அம்பாசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :9 மார்ச் 2026, 7:08 pm

Syndication

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நேரிட்ட விபத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

பாப்பாக்குடி அருகே இடைகால் வடக்குத் தெருவைச் சோ்ந்த ராமசுப்பிரமணியன் மனைவி முனியம்மாள்(49). இவா் சனிக்கிழமை அம்பாசமுத்திரத்தில் உள்ள உறவினரான மாலா என்பவருடன், அம்பாசமுத்திரம்-ஆலங்குளம் சாலையில் உள்ள மேல்நிலைப் பள்ளி அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது மற்றொரு வாகனம் உரசியதில், இருவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனா்.

இதில் பலத்த காயமடைந்த முனியம்மாள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். அம்பாசமுத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.