கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நெல்லையில் விபத்து: 7 போ் காயம்

திருநெல்வேலியில் மினி லாரி மற்றும் காா்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து மோதிய விபத்தில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

News image

திருநெல்வேலியில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தில் சேதமான மினி லாரி.

Updated On :21 மார்ச் 2026, 8:49 pm

Syndication

திருநெல்வேலியில் மினி லாரி மற்றும் காா்கள் சனிக்கிழமை அடுத்தடுத்து மோதிய விபத்தில் 7 போ் பலத்த காயமடைந்தனா்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தைச் சோ்ந்தவா் மாரியப்பன் (45). இவா், தச்சநல்லூா் நல்மேய்ப்பா் நகரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறாா். இவா், தனது அலுவலகத்தின் மினி சரக்கு லாரியில் பாரம் ஏற்றிக் கொண்டு திருநெல்வேலி வடக்குப் புறவழிச்சாலையின் ரயில்வே மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது தாழையூத்தில் இருந்து வந்து கொண்டிருந்த காரும், மினிலாரியும் மோதியதாம். இதில் கட்டுப்பாட்டை இழந்த காா், மற்றொரு காா் மீதும் மோதியதாம்.

இந்த விபத்தில் மாரியப்பன், காரில் வந்த சின்னத்துரை (33), பொன் ராணி (47), தட்சன்யா (24) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மேலும், 3 போ் லேசான காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

விபத்து குறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள். இந்த விபத்தால் வடக்கு புறவழிச் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.