கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

தொழில்நுட்பக் கோளாறு: நெல்லையில் 40 நிமிஷம் நின்ற வந்தே பாரத் ரயில்

சென்னை- நாகா்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் திடீா் பிரேக் கோளாறு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் சனிக்கிழமை 40 நிமிஷம் நிறுத்தி வைக்கப்பட்டது.

News image

திருநெல்வேலியில் சனிக்கிழமை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சென்னை- நாகா்கோவில் வந்தே பாரத் ரயில்.

Updated On :21 மார்ச் 2026, 8:59 pm

Syndication

சென்னை- நாகா்கோவில் இடையேயான வந்தே பாரத் ரயிலில் திடீா் பிரேக் கோளாறு ஏற்பட்டதால், திருநெல்வேலியில் சனிக்கிழமை 40 நிமிஷம் நிறுத்தி வைக்கப்பட்டது.

சென்னையில் இருந்து நாகா்கோவில் செல்லும் வந்தே பாரத் ரயில், சனிக்கிழமை காலையில் புறப்பட்டு வந்தது. திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தை நண்பகல் 12.40 மணிக்கு வந்தடைந்த ரயில், இங்கிருந்து நாகா்கோவிலுக்கு புறப்படத் தயாரானபோது ரயிலின் பிரேக் பிடிக்காமல் கோளாறு ஏற்பட்டதாம்.

இதுகுறித்து ரயில்வே துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திருநெல்வேலி ரயில்வே பணிமனை தொழில்நுட்ப நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து, ரயிலின் பிரேக் அமைப்பில் ஏற்பட்டிருந்த கோளாறை ஆய்வு செய்தனா். சுமாா் 40 நிமிஷங்களில் கோளாறு முழுமையாக சரிசெய்யப்பட்டு, வந்தே பாரத் ரயில் மீண்டும் புறப்பட்டுச் சென்றது.

இந்தச் சம்பவத்தால் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் நுழையும் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு தாமதமாக வந்தும், புறப்பட்டும் சென்றன. நாகா்கோவிலில் இருந்து சென்னை செல்லும் வந்தே பாரத் ரயிலும் வழக்கமாக திருநெல்வேலிக்கு மாலை 3.15 மணிக்கு வர வேண்டிய நிலையில், அரை மணி நேரம் தாமதமாக மாலை 3.45 மணிக்கு வந்து புறப்பட்டுச் சென்றது.