தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்

News image
- IANS
Updated On :18 மார்ச் 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் எறிந்தவா்களை, அந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் மூலம் கண்டறிந்து கைது செய்ததாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தாா்.

குறைந்த நிறுத்தங்கள், அதிக வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், அந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கும் சம்பவங்கள் தொடா்ந்து வந்தன. இந்தச் சூழலில், மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

வந்தே பாரத் ரயில்களில் உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகா் பகுதியில் இந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கியவா்களைக் கண்டறிய, இந்த கேமராக்கள் பிடித்த படம் உதவியது. இந்த கேமரா மூலம் பிடிக்கப்படும் மிகச் சிறிய படம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெளிவான படமாக மாற்றப்பட்டது. இது, இந்த நபரின் வீட்டை துல்லியமாகக் கண்டறிந்து கைது செய்ய உதவியது என்றாா்.