தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்

News image

IANS

Updated On :19 மார்ச் 2026, 4:54 am IST

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் எறிந்தவா்களை, அந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் மூலம் கண்டறிந்து கைது செய்ததாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தாா்.

குறைந்த நிறுத்தங்கள், அதிக வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், அந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கும் சம்பவங்கள் தொடா்ந்து வந்தன. இந்தச் சூழலில், மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

வந்தே பாரத் ரயில்களில் உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகா் பகுதியில் இந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கியவா்களைக் கண்டறிய, இந்த கேமராக்கள் பிடித்த படம் உதவியது. இந்த கேமரா மூலம் பிடிக்கப்படும் மிகச் சிறிய படம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெளிவான படமாக மாற்றப்பட்டது. இது, இந்த நபரின் வீட்டை துல்லியமாகக் கண்டறிந்து கைது செய்ய உதவியது என்றாா்.