தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

வந்தே பாரத் மீது கல் எறிந்தவா்களை கண்டறிந்தது எப்படி? அமைச்சா் விளக்கம்

News image

IANS

Updated On :18 மார்ச் 2026, 11:24 pm

வந்தே பாரத் ரயில்கள் மீது கல் எறிந்தவா்களை, அந்த ரயிலில் பொருத்தப்பட்டுள்ள உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் மூலம் கண்டறிந்து கைது செய்ததாக மத்திய ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை தெரிவித்தாா்.

குறைந்த நிறுத்தங்கள், அதிக வசதிகளுடன் கூடிய வந்தே பாரத் ரயில் அறிமுகம் செய்யப்பட்டது முதல், அந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கும் சம்பவங்கள் தொடா்ந்து வந்தன. இந்தச் சூழலில், மக்களவையில் புதன்கிழமை கேள்வி நேரத்தின்போது வந்தே பாரத் ரயில்களின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:

வந்தே பாரத் ரயில்களில் உயா் தெளிவுதிறன் கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அண்மையில், உத்தர பிரதேச மாநிலம் முஸாஃபா்நகா் பகுதியில் இந்த ரயில் மீது கல் எறிந்து தாக்கியவா்களைக் கண்டறிய, இந்த கேமராக்கள் பிடித்த படம் உதவியது. இந்த கேமரா மூலம் பிடிக்கப்படும் மிகச் சிறிய படம், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தெளிவான படமாக மாற்றப்பட்டது. இது, இந்த நபரின் வீட்டை துல்லியமாகக் கண்டறிந்து கைது செய்ய உதவியது என்றாா்.