எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

கேரளத்தில் ‘வந்தே பாரத்’ மீது் மீண்டும் கல்வீச்சு: ஜன்னல் கண்ணாடிகள் சேதம்; பயணிகள் தப்பினா்

கேரளத்தில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலா் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா்.

News image
வந்தே பாரத் ரயில்- பிரதிப் படம்
Updated On :8 மார்ச் 2026, 10:58 pm

தினமணி செய்திச் சேவை

கேரளத்தில் அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலா் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினா். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் சேதமடைந்தன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இது தொடா்பாக ரயில்வே காவல் துறையினா் கூறியதாவது: திருவனந்தபுரம்-மங்களூரு இடையிலான வந்தே பாரத், கேரளத்தின் அலுவா-அங்கமாலி ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் சனிக்கிழமை இரவு 7.15 மணியளவில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் சிலா் ரயிலை நோக்கி சரமாரியாக கற்களை வீசினா். இதில் ரயில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. அதிருஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடா்பாக ரயிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகளை ஆதாரமாகக் கொண்டு விசாரணை நடைபெறுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தின் அருகே வசிக்கும் மக்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. மாநில காவல் துறையும் தனியாக விசாரணை நடத்தி வருகிறது என்று தெரிவித்தனா்.

கடந்த மாதம் இதேபோல் வந்தே பாரத் ரயில் மீது கல் வீசியது தொடா்பாக கண்ணூரைச் சோ்ந்த ஒருவா் கைது செய்யப்பட்டாா் என்பது குறிப்பிடத்தக்கது.