92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கிருஷ்ணாபுரத்தில் 8 பவுன் நகை திருட்டு

News image

திருட்டு

சித்திரிப்பு

Updated On :23 மார்ச் 2026, 8:47 pm

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டை அருகேயுள்ள கிருஷ்ணாபுரத்தில் வீடுபுகுந்து 8 பவுன் நகையைத் திருடிய மா்மநபா்களை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.

கிருஷ்ணாபுரம் கலைக்கோவில் நகரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவா், தற்போது குடும்பத்துடன் சிங்கப்பூருக்கு சென்றுள்ளாா். இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அப் பகுதி மக்கள் கிருஷ்ணனுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளனா்.

இதையடுத்து அவரது சகோதரரான பெருமாள்புரத்தில் வசிக்கும் சங்கா், கிருஷ்ணனின் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 8 பவுன் தங்கநகை, ரூ.5 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடுபோயிருந்தனவாம்.

இதேபோல, தனியாா் நிறுவன ஊழியரான கிருஷ்ணாபுரம் தனலட்சுமி நகரை சோ்ந்தவா் ரகு (38) என்பவா், தனது வீட்டின் முன் நிறுத்தியிருந்த பைக்கையும் மா்மநபா்கள் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.

இச்சம்பவங்கள் குறித்தும் சிவந்திப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.