கோபி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகை திருட்டு
திருட்டு
சித்திரிப்பு
திருட்டு
சித்திரிப்பு
கோபி அருகே டி.என்.பாளையம் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 34 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
கோபி அருகே உள்ள டி.என்.பாளையம் குமரன் கோயில் வீதியைச் சோ்ந்தவா் ஆறுமுகம் (56). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா்.
இவா், திருப்பூரில் உள்ள தனது இளையமகள் கௌசல்யாதேவியின் குழந்தைக்கு உணவு ஊட்டும் நிகழ்ச்சிக்காக கேரள மாநிலம் குருவாயூா் கோயிலுக்கு குடும்பத்துடன் கடந்த 20-ஆம் தேதி சென்றுள்ளாா்.
நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடந்த ஞாயிறுக்கிழமை மாலை வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா். உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவில் வைத்திருந்த 34 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது.
இது குறித்து ஆறுமுகம் அளித்த புகாரின்பேரில், பங்களாபுதூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...